search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மழை பாதிப்புகளை பார்வையிட மு.க. ஸ்டாலின் இன்று கடலூர் செல்ல திட்டம்?

    தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று நான்கு நாட்களாக ஆய்வு செய்த நிலையில், இன்று மாலை கடலூர் செல்வதாக தகவல் தெரிவிக்கின்றன.
    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக சென்னையில் மழை பாதிப்புகளை தினமும் நேரில் சென்று பார்வை யிட்டு பணிகளை முடுக்கி விட்டார். இன்று மாலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து மக்கள் தவிக்கிறார்கள். மழை நீர் புகுந்ததால் சில கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன.

    கடலூர் செல்லும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அங்கு தங்கி இருக்கவும், வெள்ள பாதிப்புகளை டெல்டா மாவட்டங்களில் நேரில் சென்று பார்வை யிடவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
    Next Story
    ×