என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழை பாதிப்புகளை பார்வையிட மு.க. ஸ்டாலின் இன்று கடலூர் செல்ல திட்டம்?
Byமாலை மலர்11 Nov 2021 7:13 AM GMT (Updated: 11 Nov 2021 10:14 AM GMT)
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் வெள்ள பாதிப்புகளை நேரில் சென்று நான்கு நாட்களாக ஆய்வு செய்த நிலையில், இன்று மாலை கடலூர் செல்வதாக தகவல் தெரிவிக்கின்றன.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக சென்னையில் மழை பாதிப்புகளை தினமும் நேரில் சென்று பார்வை யிட்டு பணிகளை முடுக்கி விட்டார். இன்று மாலை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்டா மாவட்டங்களில் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. ஏராளமான பயிர்கள் நீரில் மூழ்கி கிடக்கின்றன. வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்து மக்கள் தவிக்கிறார்கள். மழை நீர் புகுந்ததால் சில கிராமங்கள் துண்டிக்கப்பட்டு தீவுகள் போல் காட்சி அளிக்கின்றன.
கடலூர் செல்லும் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அங்கு தங்கி இருக்கவும், வெள்ள பாதிப்புகளை டெல்டா மாவட்டங்களில் நேரில் சென்று பார்வை யிடவும் அவர் திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X