என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பஸ்சில் ஏற முயன்ற விவசாயியிடம் பணம் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்10 Nov 2021 6:19 PM GMT (Updated: 10 Nov 2021 6:19 PM GMT)
பஸ்சில் ஏற முயன்ற விவசாயியிடம் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே உள்ள மாதவ அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சீனிவாசரெட்டி (வயது 46). விவசாயி. இவர் நேற்று கெலமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு செல்ல பஸ்சில் ஏற முயன்றார். அப்போது கூட்டத்தை பயன்படுத்தி அவரது பாக்கெட்டில் இருந்த மணி பர்சுடன் பணத்தை 2 வாலிபர்கள் திருடி கொண்டு தப்பியோட முயன்றனர்.
இதை அறிந்த சீனிவாசரெட்டி பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபர்களை பிடித்து கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் லட்சுமிபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் கார்த்திக், (19), பென்னிக்கல்லை சேர்ந்த ராமய்யா மகன் மாதேஷ் (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X