search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விரைவு ரெயில்
    X
    விரைவு ரெயில்

    நெல்லையில் இருந்து இன்று முதல் திருச்செந்தூர், செங்கோட்டைக்கு விரைவு ரெயில் இயக்கம்

    நெல்லையில் இருந்து தூத்துக்குடி, திருச்செந்தூர், செங்கோட்டைக்கு விரைவு ரெயிலாக இயக்கப்பட்டாலும் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    நெல்லை:

    கொரோனா தொற்று ஊரடங்கை தொடர்ந்து இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.தற்போது இந்த ரெயில்கள் விரைவு ரெயில்களாக மாற்றப்பட்டு இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டது. தூத்துக்குடிக்கு கட்டணமாக ரூ.35-ம், குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30-ம் வசூலிக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று முதல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், செங்கோட்டைக்கும் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது.

    இன்று முதல் நாள் என்பதால் இந்த ரெயில்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. டிக்கெட் கவுண்டர்களிலும் கூட்டம் இல்லை. எனவே இன்று இயக்கப்பட்ட இந்த ரெயில்களில் குறைந்த பயணிகள் சென்றனர். பல பெட்டிகள் காலியாக சென்றது.

    இந்த ரெயில்கள் விரைவு ரெயிலாக இயக்கப்பட்டாலும் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

    Next Story
    ×