என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெல்லையில் இருந்து இன்று முதல் திருச்செந்தூர், செங்கோட்டைக்கு விரைவு ரெயில் இயக்கம்
நெல்லை:
கொரோனா தொற்று ஊரடங்கை தொடர்ந்து இந்த ரெயில்கள் நிறுத்தப்பட்டன.தற்போது இந்த ரெயில்கள் விரைவு ரெயில்களாக மாற்றப்பட்டு இயக்க ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 8-ந்தேதி நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு விரைவு ரெயில் இயக்கப்பட்டது. தூத்துக்குடிக்கு கட்டணமாக ரூ.35-ம், குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30-ம் வசூலிக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று முதல் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கும், செங்கோட்டைக்கும் விரைவு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு ரூ.45 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குறைந்த பட்ச கட்டணமாக ரூ.30 வசூலிக்கப்படுகிறது.
இன்று முதல் நாள் என்பதால் இந்த ரெயில்களில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. டிக்கெட் கவுண்டர்களிலும் கூட்டம் இல்லை. எனவே இன்று இயக்கப்பட்ட இந்த ரெயில்களில் குறைந்த பயணிகள் சென்றனர். பல பெட்டிகள் காலியாக சென்றது.
இந்த ரெயில்கள் விரைவு ரெயிலாக இயக்கப்பட்டாலும் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்