search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது- கணவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது தொடர்பாக கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள கீழபாலாமடை கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது29). இவருக்கு கடந்த ஆண்டு ராஜவல்லிபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடந்தது.

    தற்போது குழந்தை பேறுக்காக அந்த இளம்பெண்ணை நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சமீபத்தில் அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அரசு ஆஸ்பத்திரியில் அந்த இளம்பெண் குறித்து விபரங்களை சேகரித்த போது, அவருக்கு 16 வயதே பூர்த்தியானது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதார ஊழியர் முத்துலெட்சுமி போலீசில் புகார் செய்தார். நெல்லை தாலுகா அனைத்து மகளிர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 16 வயதான சிறுமிக்கு திருமணம் செய்து குழந்தை பிறந்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சிறுமியின் கணவர் கணேசன் (29), தாயார் ஆயிரத்தம்மாள், சகோதரன் மணிகண்டன் மற்றும் உறவினர்களான கீழபாலாமடையை சேர்ந்த செல்லப்பா, ஆறுமுகக்கனி, லில்லி ஜெபமணி ஆகிய 6 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×