search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    மொரப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

    மொரப்பூர் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மொரப்பூர்:

    மொரப்பூர் அருகே உள்ள வகுத்தானூரை சேர்ந்தவர் மாயக்கண்ணன், விவசாயி. இவரது மனைவி வள்ளி (வயது 42). இவர் கடந்த 6 மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வள்ளி நேற்று வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கி கிடைந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு மொரப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது வள்ளி ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×