என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிலத்தகராறில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு- விவசாயி கைது
Byமாலை மலர்9 Nov 2021 12:13 PM GMT (Updated: 9 Nov 2021 12:13 PM GMT)
பாப்பாரப்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே உள்ள தொட்டலாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னசாமி. இவருடைய தம்பி சின்ன கிருஷ்ணன். விவசாயிகள். அண்ணன், தம்பிக்கு இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று சின்னகிருஷ்ணனின் கரும்பு தோட்டத்தை சின்னசாமி வளர்த்து வந்த நாய் சேதப்படுத்தியதாக கூறப்படு்கிறது.
இதனால் அவர் தனது அண்ணன் மனைவிகண்ணம்மாவை (வயது55) திட்டி உள்ளார். இதனை அவரது மகன் முனியப்பன் தட்டி கேட்டுள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சின்ன கிருஷ்ணன் அரிவாளால் கண்ணம்மாவைவெட்டினார்.
இதில் அவருக்கு கை எலும்பு முறிந்தது. இந்த மோதலில் சின்ன கிருஷ்ணனின் மகன் விக்னேசுக்கு காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்ன கிருஷ்ணனை கைது செய்தனர். மேலும் கண்ணம்மாள், முனியப்பன், விக்னேஷ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X