என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு மாதத்தில் 61.53 செ.மீ. மழை- புதுச்சேரியில் 26 ஏரிகள் நிரம்பின
Byமாலை மலர்9 Nov 2021 3:43 AM GMT (Updated: 9 Nov 2021 3:43 AM GMT)
ஏரி வாய்க்கால்களையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் 61.53 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதையொட்டி நேற்றைய நிலவரப்படி 26 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 11.51 அடி உயரம் கொண்டது. இதில் தற்போது 9 அடியை எட்டியுள்ளது. 9.84 அடி உயரம் கொண்ட பாகூர் ஏரியின் நீர்மட்டம் தற்போது 7.21 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஏரிகள் நிரம்பி விடும்.
முருங்கப்பாக்கம், உழந்தை கீரப்பாளையம், சோரப்பட்டு, வம்புபட்டு, அபிஷேகப்பாக்கம் உள்பட 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. தொடர்ந்து ஏரிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரி வாய்க்கால்களையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது. மீதம் உள்ள 58 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்தில் 61.53 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 84 ஏரிகள் உள்ளன. தற்போது மழை பெய்து வருவதையொட்டி நேற்றைய நிலவரப்படி 26 ஏரிகள் நிரம்பியுள்ளன. இதில் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி 11.51 அடி உயரம் கொண்டது. இதில் தற்போது 9 அடியை எட்டியுள்ளது. 9.84 அடி உயரம் கொண்ட பாகூர் ஏரியின் நீர்மட்டம் தற்போது 7.21 அடியாக உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஏரிகள் நிரம்பி விடும்.
முருங்கப்பாக்கம், உழந்தை கீரப்பாளையம், சோரப்பட்டு, வம்புபட்டு, அபிஷேகப்பாக்கம் உள்பட 26 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின. தொடர்ந்து ஏரிகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரி வாய்க்கால்களையொட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து எச்சரித்துள்ளது. மீதம் உள்ள 58 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X