என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்8 Nov 2021 3:34 PM GMT (Updated: 8 Nov 2021 3:34 PM GMT)
வெளிமாநிலத்திற்கு கடத்த முயன்ற 4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே பாச்சல் ஊராட்சி, தொன்போஸ்கோ நகர் பகுதியில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி வந்த மினிலாரியை பிடித்து விசாரணை நடத்தினர். டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது அவர் திருப்பத்தூர் எல்.ஐ.சி. பின்புறம், அம்பேத்கர் காலனியை சேர்ந்த லோகநாதன் (வயது42) என்பதும், கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதிக்கு ரேஷன் அரிசியை கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய சென்றதும் தெரியவந்தது.
மேலும் இவருடன் தாமு என்ற வெங்கடேசன், அண்ணாமலை ஆகியோருடன் சேர்ந்து ரேஷன் கடத்தியதாக தெரிவித்தார். இதனையடுத்து லோகநாதனை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர் கடத்தி வந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர். மேலும் தாமு என்ற வெங்கடேசன், அண்ணாமலையை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X