என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடி லாட்ஜில் கோவை வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்8 Nov 2021 10:06 AM GMT (Updated: 8 Nov 2021 10:06 AM GMT)
காட்பாடி லாட்ஜில் வெளிமாவட்ட வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
கோவை மாவட்டம் வெள்ளாலூர் ராகவேந்திரா கார்டன் பகுதியை சேர்ந்தவர் சந்தானம் மகன் நவநீதன் (வயது 40). இவர் வேலூர் காட்பாடியில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
இன்று காலையில் நீண்டநேரமாகியும் நவநீதன் இருந்த அறை திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் இதுகுறித்து விருதம்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவைத் திறந்தனர். அங்குள்ள மின்விசிறியில் நவநீதன் தூக்கில் பிணமாக தொங்கினார்.
போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் எதற்காக வேலூர் வந்தார்? தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X