search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாயம்
    X
    மாயம்

    விருதுநகரில் ஜவுளிக்கடை பெண் ஊழியர் திடீர் மாயம்- கணவர் போலீசில் புகார்

    தீபாவளி அன்று வேலைக்கு சென்ற பெண் மாயமானது தொடர்பாக அவரது கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அல்லம்பட்டியைச் சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 34). இவர் மூலிகை மருந்து கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மனைவி உமாதேவி (28). அந்தப்பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள மருந்து கடை ஊழியர் முத்துப்பாண்டியுடன் அடிக்கடி பேசினாராம். இதனை செல்லத்துரை கண்டித்துள்ளார்.

    தீபாவளியன்று உமா தேவி வேலைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இன்று திரும்பி வர நேரமாகும் என கூறிச் சென்றார்.

    ஆனால் நீண்ட நேரமாகியும் உமாதேவி வீடு திரும்பாததால் கணவர் செல்லத்துரை பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் அவரைப்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து விருதுநகர் கிழக்கு போலீசில் செல்லத்துரை புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உமாதேவியை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×