என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

கடந்த ஆண்டைவிட ரூ.23½ கோடி சரிவு - மது வகை விலை உயர்வே விற்பனை குறைந்ததற்கு காரணம்

சென்னை:
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 3 மற்றும் 4-ந் தேதிகளில் ரூ.444 கோடியே 3 லட்சத்துக்கு டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனையானது. இது கடந்த ஆண்டை விட ரூ.23 கோடியே 66 லட்சம் குறைவாகும்.
இது பற்றி மதுக்கடை விற்பனையாளர்கள் கூறியாவது:-
நிறைய மதுக்கடைகளில் இந்த முறை மக்கள் முண்டியடித்து மது வாங்கும் அளவுக்கு அதிக கூட்டம் காணப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் இல்லாததுதான்.
தமிழகத்தில் விற்கப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையை (எலைட் ஷாப்) ரூ.10 முதல் ரூ.500 வரை சமீபகாலமாக உயர்த்தி உள்ளனர்.
குறிப்பாக ஜானிவாக்கர், பெய்லி ஐரீஷ், ஜெ.பி.விஸ்கி உள்ளிட்ட மது வகைகளின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இதன் விற்பனை குறைந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் மது விற்பனை குறைந்துவிட்டது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்...பொதுமக்கள் ஊர் திரும்ப வசதியாக 17,719 பஸ்கள் இயக்கம்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
