என் மலர்

    செய்திகள்

    புதுவை கடலில் தேசிய கொடியுடன் கட்டுமரங்கள் வலம் வந்த காட்சி.
    X
    புதுவை கடலில் தேசிய கொடியுடன் கட்டுமரங்கள் வலம் வந்த காட்சி.

    புதுவை கடலில் தேசிய கொடியுடன் கட்டுமரங்கள் அணிவகுப்பு: முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலையின் பின்புறம் 75 எந்திரம் பொருத்திய கட்டுமரங்களின் அணி வகுப்பு இன்று நடந்தது.
    புதுச்சேரி:

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி புதுவை அரசு துறைகள் சார்பில் பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    அதுபோல் புதுவை அரசின் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி சிலையின் பின்புறம் 75 எந்திரம் பொருத்திய கட்டுமரங்களின் அணி வகுப்பு இன்று நடந்தது.

    முதல்- அமைச்சர் ரங்கசாமி


    இதனை முதல்- அமைச்சர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், துறை செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அணிவகுப்பில் பங்கேற்ற மீனவர்கள் தங்களது படகில் தேசிய கொடியை ஏற்றி காந்தி சிலை அருகே கடலில் வலம் வந்தனர்.

    Next Story
    ×