என் மலர்
செய்திகள்

கைது
லாலாபேட்டை அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேர் கைது
லாலாபேட்டை அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டையில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது லாலாபேட்டையை சேர்ந்த ரங்கசாமி (வயது 75), மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சத்யநாராயணன் (44) ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.850 பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






