search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம்
    X
    பணம்

    கரூர் அருகே பணம் திருடியவர் கைது

    கரூர் அருகே பணம் திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் வெங்கமேடு அருகே உள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பிரகாஷ் (வயது 38). இவர் வாங்கபாளையம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் அருள்பிரகாஷிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.700 திருடி உள்ளார்.இதையடுத்து வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் அருள்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிய புதுக்கோட்டை மாவட்டம் காமராஜர்புரத்தை சேர்ந்த பாண்டி (28) என்ற வாலிபரை கைது செய்தார்.
    Next Story
    ×