search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கோவையில் கல்லூரி பேராசிரியர் வீடு உள்பட 2 இடங்களில் கொள்ளை

    கோவையில் கல்லூரி பேராசிரியர் வீட்டில் இருந்து வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குனியமுத்தூர்:

    கோவைப்புதூர் அருகே உள்ள குற்றாலம் நகரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

    கடந்த 30-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டின் அறையில் இருந்த 1¼ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். வீட்டிற்கு திரும்பிய ரமேஷ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வெள்ளி பொருட்கள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவஇடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கரும்புக்கடை பாத்திமா நகரை சேர்ந்தவர் அஜிமல்ஷா (43). இவர் திருச்சி ரோட்டில் எலக்ட்ரானிக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கு இருந்த எல்.இ.டி.,டி.வி. மின்விசிறி, லேப்டாப், கியாஸ் அடுப்பு உள்பட ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள், ரூ.15 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    மறுநாள் கடையை திறக்க சென்ற அஜிமல்ஷா கடையில் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எலக்ட்ரானிக்ஸ் கடையில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×