என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மருத்துவமனை, வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை
Byமாலை மலர்3 Nov 2021 2:47 AM GMT (Updated: 3 Nov 2021 2:47 AM GMT)
மருத்துவமனை, வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டருக்குள் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையின்போது பசுமை பட்டாசுகளை மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட 2 மணி நேரத்திற்கு மட்டுமே வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்ற பட்டாசுகளுக்கு பதிலாக பசுமை பட்டாசுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசுகள் வெடிப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
125 டெசிபெல் அளவுக்கு அதிகமாக வெடிக்கும் பட்டாசுகளை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பேரியம், ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதுபோன்ற பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.
தீபாவளி பண்டிகையை மக்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும். கொண்டாட்டத்தால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து தீபத்திருநாளை புதுச்சேரி மக்கள் கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ஸ்மிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தீபாவளி பண்டிகையின்போது பசுமை பட்டாசுகளை மாவட்ட நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்ட 2 மணி நேரத்திற்கு மட்டுமே வெடிக்க வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்ற பட்டாசுகளுக்கு பதிலாக பசுமை பட்டாசுகள் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
அமைதி பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகள், வழிபாட்டுதலங்கள், கல்விக்கூடங்கள் மற்றும் நீதிமன்ற வளாகத்தின் சுற்று வட்டாரங்களில் 100 மீட்டருக்குள் பட்டாசுகள் வெடிப்பது முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
125 டெசிபெல் அளவுக்கு அதிகமாக வெடிக்கும் பட்டாசுகளை உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய பேரியம், ரசாயனம் கலந்து தயாரிக்கப்படும் பட்டாசுகள் மற்றும் சரவெடிக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே அதுபோன்ற பட்டாசுகளை சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ கூடாது.
தீபாவளி பண்டிகையை மக்கள் பொறுப்புடன் கொண்டாட வேண்டும். கொண்டாட்டத்தால் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்து தீபத்திருநாளை புதுச்சேரி மக்கள் கொண்டாட வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு குழு கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X