என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருட்டு
    X
    திருட்டு

    நச்சலூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

    நச்சலூர் அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நச்சலூர்:

    நச்சலூர் அருகே உள்ள நெய்தலூர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 21). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளை நெய்தலூர் கடை வீதியில் உள்ள காளியம்மன் கோவில் முன்பு நிறுத்தி விட்டு சந்தைக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்க்கும் போது மோட்டார் சைக்கிளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
    Next Story
    ×