என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கீரனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

    கீரனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    கீரனூர் போலீசார், நார்த்தாமலையை அடுத்த சமத்துவபுரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பொம்மாடிமலையை சேர்ந்த ஜமீஸ்(வயது 41) உள்பட 5 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ரூ.310 மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    Next Story
    ×