search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    தீபாவளியை முன்னிட்டு சென்னை-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்

    தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில், வரும் 8-ந்தேதி மாலை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை நெல்லை சென்றடையும்.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    * சென்னை எழும்பூர்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்:06037), இன்று (செவ்வாய்கிழமை) இரவு 10.05 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் சிறப்பு கட்டண ரெயில் (06038), வரும் 5-ந்தேதி மதியம் 3.10 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 5.20 மணிக்கு சென்னை வந்தடையும்.

    * தாம்பரம்-நெல்லை சிறப்பு கட்டண ரெயில் (06039), வரும் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3 மணிக்கு நெல்லை சென்றடையும். இதைப்போல் நெல்லை-தாம்பரம் சிறப்பு கட்டண ரெயில் (06040) வரும் 7-ந்தேதி மாலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு, காலை 7.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×