என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

X
மணல்
மணலூர்பேட்டை அருகே மணல் கடத்தல்- வாலிபர் கைது
By
மாலை மலர்1 Nov 2021 4:29 PM GMT (Updated: 1 Nov 2021 4:29 PM GMT)

மணலூர்பேட்டை அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்:
மணலூர்பேட்டை அருகே பள்ளிசந்தல் கிராமத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் இருந்து மர்ம நபர்கள் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த 2 மோட்டார் சைக்கிள்களை பிடிக்க முயன்றபோது ஒருவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவி்ட்டு தப்பி ஓடிவிட்டார். இன்னொருவர் பிடிபட்டார். விசாரணையில் அவர் பள்ளிச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் அய்யனார்(வயது 21), தப்பி ஓடியவர் ஏழுமலை மகன் பாலாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரை கைது செய்த போலீசார் 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய பாலாஜியை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
