என் மலர்
செய்திகள்

விபத்து பலி
கொள்ளிடம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி
கொள்ளிடம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்துள்ள கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது40). கொத்தனாரான இவர் நேற்று முன்தினம் தைக்கால் கிராமத்துக்கு சென்று அப்பகுதியில் ஒருவர் வீட்டில் வேலை பார்த்தார். பின்னர் மாலை வேலை முடிந்த பின் மோட்டார் சைக்கிளில் மணிகண்டன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தார். சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் பள்ளிவாசல் எதிரே அவர் சென்ற போது சாலையின் குறுக்கே ஒரு நாய் வந்தது. இதனால் அவர் வாகனத்தை திருப்பிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து மணிகண்டன் தவறி விழுந்தார்.
இதில் தலையில் காயமடைந்த அவர் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு சென்றுவிட்டார். இரவு இவருக்கு மீண்டும்தலைவலி அதிகமாக இருந்ததால் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து மணிகண்டனின் மனைவி தீபா அளித்த புகாரின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






