என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு பஸ்கள்
    X
    சிறப்பு பஸ்கள்

    வேலூரிலிருந்து தீபாவளிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

    வேலூரிலிருந்து - சென்னை, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்துர், தருமபுரி மற்றும் ஓசூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
    வேலூர்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூர் மண்டலத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 3-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பயணிகள் வசதிக்காக கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

    திருச்சிக்கு 5, பெங்களூருக்கு 10 பஸ்களும், ஓசூருக்கு 20, தருமபுரிக்கு 5 பஸ்களும், சென்னைக்கு 75 பஸ்களும் இயக்கப்படும். மேலும், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வேலூரிலிருந்து - சென்னை, ஆற்காடு, வேலூர், குடியாத்தம், பேர்ணாம்பட்டு, திருப்பத்துர், தருமபுரி மற்றும் ஓசூர் மார்க்கமாக இயக்கப்படும் அனைத்து பஸ்களும் பூந்தமல்லி பஸ் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

    தீபாவளிக்கு பின்னர் 5-ந் தேதி முதல் 8-ந்தேதி வரை கூடுதலாக திருப்பத்துர், வேலுர் ஆற்காடு ஆகிய இடங்களிலிருந்து பெங்களுருக்கு 20 பஸ்களும், சென்னைக்கு 100 பஸ்களும் ஓசூருக்கு 30 பஸ்களும் இயக்கப்படும் என கலெக்டர்குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×