என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுபோதையில் கார் டிரைவர் கொலை- கிணற்றுக்குள் தள்ளி விட்ட நண்பர் கைது
Byமாலை மலர்29 Oct 2021 10:44 AM GMT (Updated: 29 Oct 2021 10:44 AM GMT)
கந்திகுப்பம் அருகே மதுபோதையில் டிரைவர் கொலை செய்யப்பட்டார். கிணற்றுக்குள் தள்ளிவிட்ட நண்பர் கைது செய்யப்பட்டார்.
பர்கூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ரஷீத் (வயது 36). கார் டிரைவரான இவரும், இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த திலீப்குமார் (40), மனோகரன் (30), பிரதீஷ் (22) ஆகியோர் ஒரப்பம் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றனர். பின்னர் அந்த பகுதியில் ஒரு கிணற்றின் சுற்று சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திலீப்குமார், ரஷீத்தை கிணற்றுக்குள் தள்ளி விட்டதாக தெரிகிறது. 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த ரஷித் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார், பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி ரஷித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ரஷித்தை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த திலீப்குமாரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் ரஷீத் (வயது 36). கார் டிரைவரான இவரும், இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த திலீப்குமார் (40), மனோகரன் (30), பிரதீஷ் (22) ஆகியோர் ஒரப்பம் பகுதியில் ஒரு டாஸ்மாக் கடைக்கு மதுகுடிக்க சென்றனர். பின்னர் அந்த பகுதியில் ஒரு கிணற்றின் சுற்று சுவரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திலீப்குமார், ரஷீத்தை கிணற்றுக்குள் தள்ளி விட்டதாக தெரிகிறது. 50 அடி ஆழ கிணற்றில் விழுந்த ரஷித் பரிதாபமாக இறந்தார்.
தகவல் அறிந்த கந்திகுப்பம் போலீசார், பர்கூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி ரஷித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ரஷித்தை கிணற்றுக்குள் தள்ளி கொலை செய்த திலீப்குமாரை போலீசார் கைது செய்தனர். மதுபோதையில் நடந்த இந்த கொலை அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X