என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலுமலை அருகில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிப்பு
Byமாலை மலர்27 Oct 2021 11:35 AM GMT (Updated: 27 Oct 2021 11:35 AM GMT)
மேலுமலை அருகில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து கிருஷ்ணகிரி தாலுகா மேலுமலை ஊராட்சியில் பி.ஜி.துர்க்கம் என்று அழைக்கப்படும் பாலகொன்றாயதுர்க்கம் பெருமாள் கோவில் மலையடிவாரத்தில் ஆய்வு செய்தது.
அப்போது பெரிய பாறையில் 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு இருப்பதை ஆய்வாளர் சதானந்த கிருஷ்ணகுமார் தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது:-
ஒரு பெரிய பாறை முழுவதும், ஒரே கல்வெட்டு 3 இடங்களில் தொடர்ச்சியாக வெட்டப்பட்டுள்ளது. இப்போது நாம் ஒவ்வொரு பக்கத்துக்கும் பக்க எண் கொடுப்பது போல 1, 2 மற்றும் 3 என எண் கொடுத்து அதன் கீழே வெட்டி உள்ளனர். செப்பேடுகளில் ஒவ்வொரு பக்கத்திலும் எண்கள் உள்ளன. இந்த கல்வெட்டு ஒய்சாள மன்னர்களில் கடைசி மன்னனான 3-ம் வீரவல்லாளனின் காலத்தைச் சேர்ந்தது.
இவரது காலத்திய கல்வெட்டுக்களை அத்திமுகம், மல்லப்பாடி, பி.ஜி.துர்க்கம் என 3 இடங்களில் கண்டறிந்துள்ளோம். பி.ஜி.துர்க்க கல்வெட்டின் தொடக்கத்தில் பெரிய அளவிலான கோட்டுருவங்கள் காட்டப்பட்டுள்ளன. நடுவில் சக்கரமும், இடப்பக்கம் மனித உருவிலான கண்டப்பேருண்ட பறவையும், வலப்பக்கம் புலியின் உருவமும் காட்டப்பட்டுள்ளது. அருகில் குடை, சாமரம், சூரியன், சந்திரன் ஆகியவையும் காட்டப்பட்டுள்ளன.
கல்வெட்டின் முடிவில், பூர்ணகும்பம் மற்றும் குத்துவிளக்குகள் காட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டு கி.பி. 1339-ம் ஆண்டைச் சேர்ந்ததாகும். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்னரே திருப்பதி கோவிலின் மடத்துக்கு இங்குள்ள ஒரு ஊர் தானம் அளிக்கப்பட்டிருப்பதை பார்க்கும்போது அக்காலத்திலேயே திருப்பதி புகழ் பெற்றிருந்ததை அறிய முடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவின் தலைவர் நாராயணமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், கணேசன், ஆசிரியர் ரவி, விஜயகுமார், மாருதி மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X