என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெம்பாக்கம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்27 Oct 2021 10:58 AM GMT (Updated: 27 Oct 2021 10:58 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே மது குடிக்க மனைவி பணம் தராததால் மனமுடைந்த தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஹரிஹர பாக்கம் கிராமம் பள்ளி கூட தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி தேவகி (45) இவர்களுக்கு ரம்யா, சந்தியா என்ற 2 மகள் உள்ளனர். பூங்காவனத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று வழக்கம் போல் மது குடிக்கப் பணம் கேட்டபோது இவருடைய மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்து சாப்பிட்டு மயக்கமான நிலையில் இருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த ஹரிஹர பாக்கம் கிராமம் பள்ளி கூட தெருவை சேர்ந்தவர் பூங்காவனம் (வயது 45). கூலி வேலை செய்து வந்தார்.
இவருடைய மனைவி தேவகி (45) இவர்களுக்கு ரம்யா, சந்தியா என்ற 2 மகள் உள்ளனர். பூங்காவனத்திற்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தன்று வழக்கம் போல் மது குடிக்கப் பணம் கேட்டபோது இவருடைய மனைவி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷ மருந்து சாப்பிட்டு மயக்கமான நிலையில் இருந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இது குறித்து தூசி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X