என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாமியை தோளில் தூக்கி சென்று தங்க ரதத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு
Byமாலை மலர்27 Oct 2021 6:56 AM GMT (Updated: 27 Oct 2021 9:10 AM GMT)
ஈசானிய மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள "யாத்ரி நிவாஸ்" என்ற பக்தர்கள் தங்கும் விடுதியை மக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் சேகர்பாபு அர்ப்பணித்தார்.
திருவண்ணாமலை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
பின்னர் கோவில் வளாகத்தில் செயல்பட்டுவரும் மருத்துவ முதலுதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈசானிய மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள "யாத்ரி நிவாஸ்" என்ற பக்தர்கள் தங்கும் விடுதியை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள மின் இணைப்புகளை பூமிக்கடியில் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் திருக்கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தேரோடும் வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பது கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பாகவும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு இன்று காலை வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
முன்னதாக சாமி தரிசனம் செய்த அவர் கோவில் வளாகத்தில் ஓதுவார் பயிற்சி பள்ளியை தொடங்கி வைத்தார். பின்னர் சாமியை தோளில் சுமந்து சென்று தங்க ரதத்தை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் தல மரக்கன்று நட்டார்.
பின்னர் கோவில் வளாகத்தில் செயல்பட்டுவரும் மருத்துவ முதலுதவி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஈசானிய மைதானம் அருகில் அமைக்கப்பட்டுள்ள "யாத்ரி நிவாஸ்" என்ற பக்தர்கள் தங்கும் விடுதியை மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் கிரிவலப் பாதையில் உள்ள மின் இணைப்புகளை பூமிக்கடியில் அமைப்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும் திருக்கோவில் வளர்ச்சி பணிகள் குறித்து எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் தேரோடும் வீதியில் கான்கிரீட் சாலை அமைப்பது கார்த்திகை தீபத் திருவிழா தொடர்பாகவும் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் முருகேஷ், அண்ணாதுரை எம்.பி, கோவில் இணை ஆணையர் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதையும் படியுங்கள்... ஓ.பி.எஸ் மனதில் பட்டதை துணிவாக கூறியுள்ளார்- டி.டி.வி.தினகரன்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X