என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துண்டு சீட்டில் எண்களை எழுதி லாட்டரி சீட்டு என விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்26 Oct 2021 9:31 AM GMT (Updated: 26 Oct 2021 9:31 AM GMT)
துண்டு சீட்டில் எண்களை எழுதி லாட்டரி சீட்டு என விற்ற 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.8450 பறிமுதல் செய்தனர்.
சிவகாசி:
சிவகாசி பகுதியில் உள்ள தொழிலாளர்களை குறி வைத்து சிலர் துண்டு சீட்டில் எண்களை எழுதி கொடுத்து லாட்டரி என பணம் பெற்று வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து சிவகாசி துணைபோலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு துண்டு சீட்டில் எண்களை எழுதி கொடுத்து பணம் வசூலிக்கும் கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான தனிப்படையினர் திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வவிமல்கனி (வயது 48), ராஜா (39) ஆகியோர் எண்களை எழுதி துண்டு சீட்டுகள் வைத்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவைகள் லாட்டரி சீட்டுக்கள் என கூறி அந்த துண்டு சீட்டுக்களை விற்றுவந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.8450 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி பகுதியில் உள்ள தொழிலாளர்களை குறி வைத்து சிலர் துண்டு சீட்டில் எண்களை எழுதி கொடுத்து லாட்டரி என பணம் பெற்று வந்தனர். இதுகுறித்த செய்தி தினத்தந்தியில் வெளியானது. இந்த செய்தியை தொடர்ந்து சிவகாசி துணைபோலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு துண்டு சீட்டில் எண்களை எழுதி கொடுத்து பணம் வசூலிக்கும் கும்பல் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையிலான தனிப்படையினர் திருத்தங்கல் முத்து மாரியம்மன் காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வவிமல்கனி (வயது 48), ராஜா (39) ஆகியோர் எண்களை எழுதி துண்டு சீட்டுகள் வைத்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவைகள் லாட்டரி சீட்டுக்கள் என கூறி அந்த துண்டு சீட்டுக்களை விற்றுவந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.8450 பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X