என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்பாக்கம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்25 Oct 2021 12:32 PM GMT (Updated: 25 Oct 2021 12:32 PM GMT)
கல்பாக்கம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்பாக்கம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் அண்ணாத்துரை. இவரது மகள் கீர்த்தனா (வயது 22). இவருக்கும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தாலுகா பச்சம்பாக்கம் அடுத்த பசுவநத்தம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவருக்கும் 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணிகண்டன் சென்னை அம்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை. கீர்த்தனாவிடம் கணவரின் வீட்டை சேர்ந்தவர்கள் அடிக்கடி வரதட்சணை கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அணைக்கட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன் வழக்குப்பதிவு செய்தார்.
மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராயப்பன் விசாரணை மேற்கொண்டு மணிகண்டன் மற்றும் அவரது தாயார் வசந்தா (50) ஆகியோரை கைது செய்தனர். இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X