என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழப்பு
    X
    உயிரிழப்பு

    குன்னம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

    குன்னம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி வடக்கு தெருவை சேர்ந்தவர் செம்பையன். இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி. இவர்களுக்கு வசந்த்(வயது 10) என்ற மகனும், வைஷ்ணவி(8) என்ற மகளும் உண்டு.

    சில்லக்குடியில் உள்ள அரசு பள்ளியில் வசந்த் 5-ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில் வைஷ்ணவி 3-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக 8-ம் வகுப்புகள் வரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், வசந்த் வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில் நேற்று வசந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து சில்லக்குடி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான குட்டையில் குளிக்கச் சென்றான். அங்கு குளித்தபோது நீச்சல் தெரியாத நிலையில் வசந்த் குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.

    இதுகுறித்து குன்னம் போலீசில் நந்தினி அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×