search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    இரும்பு கம்பிகள் திருடிய வாலிபர் கைது

    இரும்பு கம்பிகள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    ஓசூர் தளி அட்கோவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 53). மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஓசூரில் மத்தம் சாலையில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று அங்கு வந்த நபர் இரும்பு கம்பிகளை திருட முயன்றார். இதை கவனித்த அங்கிருந்தவர்கள் அந்த நபரை மடக்கி பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள உலகநந்தஅள்ளியை சேர்ந்த சின்னசாமி (வயது 27) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×