என் மலர்
செய்திகள்

கைது
ஓசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
ஓசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் ராம்நகர் மாரியம்மன் கோவில் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய ராம் நகர் நூர் முகமது (வயது38), அவ்வை நகர் சங்கர் (40), பாகலூர் ஹவுசிங் போர்டு சிவக்குமார் (34), கோவிந்த அக்ரஹாரம் முரளி (28), ராம்நகர் நூருல்லா (38), ராயக்கோட்டை ஹவுசிங் போர்டு மஞ்சுநாத் (33), பேரண்டப்பள்ளி ஹரீஷ்குமார் (31) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4,390 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story






