search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    சிவகாசி அருகே முதியவர் தற்கொலை

    சிவகாசி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி புலிப்பாறைப்பட்டியை சேர்ந்தவர் குள்ளப்பன் (வயது 60). இவர் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள சுடுகாட்டில் படுத்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி லட்சுமி, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் குள்ளப்பனை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இந்த சம்பவம் குறித்து லட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து குள்ளப்பன் தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×