search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மயிலாடுதுறை அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

    மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே ஆடு திருடியது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே மேலையூர் ஐயர் காலனியைச் சேர்ந்த படையப்பா என்கின்ற ராஜீவ்காந்தி, கீழையூர் கே.கே. நகரை சேர்ந்த பால மணிகண்டன் (வயது 25), அருண்குமார் (24) ஆகியோர் செம்பனார்கோயில் அருகே மேமாத்தூர் விநாயகர் நகரை சேர்ந்த தங்கம் என்கின்ற ரெங்கபாஷ்யம் வீட்டில் கட்டப்பட்டிருந்த ஆடு திருடி சென்று இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்ல முயற்சி செய்தனர்.

    இதனையறிந்த ஊர்மக்கள் அவர்களை விரட்டி பிடித்தனர். இதில் படையப்பா மட்டும் தப்பியோடி தலைமறைவாகி விட்டார். இதையடுத்து மணிகண்டன், அருண்குமாரை செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து படையப்பாவை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×