search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    சூளகிரி அருகே கார் கவிழ்ந்து புதினா வியாபாரி பலி

    சூளகிரி அருகே கார் கவிழ்ந்து புதினா வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சூளகிரி அருகில் உள்ள சூழல்தின்னா பகுதியை சேர்ந்தவர் மணி (வயது24). புதினா வியாபாரி. சம்பவத்தன்று இரவு காரில் கிருஷ்ணகிரி நோக்கி சென்றார். அப்போது இம்மிடிநாயக்கனூர் அருகே மேம்பாலத்தின் சுவரில் கார் மோதியது. இதில் கார், சாலையோரம் இருந்த தண்ணீர் தேங்கி இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் தண்ணீரில் மூழ்கியதில் மணி சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து, சூளகிரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×