என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வில்லியனூரில் ஒரே நாளில் 44 பேரை கடித்து குதறிய வெறிநாய்
Byமாலை மலர்16 Oct 2021 2:52 AM GMT (Updated: 16 Oct 2021 2:52 AM GMT)
வில்லியனூர் பகுதியில் ஒரே நாளில் 44 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
வில்லியனூர்:
வில்லியனூர் பகுதியில் நாய், மாடு, பன்றிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதையடுத்து போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை ஆரியப்பாளையம் பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோர் என 20 பேரை துரத்தி துரத்தி கடித்தது.
பின்னர் வில்லியனூர் மார்க்கெட், தில்லைநகர், திருக்காமீஸ்வரர் நகர் பகுதிக்குள் புகுந்த அந்த நாய் மேலும் 24 பேரை கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த 44 பேரும் சிகிச்சை பெறுவதற்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படையெடுத்தனர்.
ஒரே நாளில் 44 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெறி நாயை பிடிக்கும் நடவடிக்கையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வில்லியனூர் பகுதியில் நாய், மாடு, பன்றிகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இதையடுத்து போக்குவரத்து இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் நேற்று காலை ஆரியப்பாளையம் பகுதியில் வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து செல்வோர், மோட்டார் சைக்கிளில் செல்வோர் என 20 பேரை துரத்தி துரத்தி கடித்தது.
பின்னர் வில்லியனூர் மார்க்கெட், தில்லைநகர், திருக்காமீஸ்வரர் நகர் பகுதிக்குள் புகுந்த அந்த நாய் மேலும் 24 பேரை கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த 44 பேரும் சிகிச்சை பெறுவதற்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு படையெடுத்தனர்.
ஒரே நாளில் 44 பேரை வெறிநாய் கடித்து குதறியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வெறி நாயை பிடிக்கும் நடவடிக்கையில் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X