search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழந்தை பலி
    X
    குழந்தை பலி

    அண்டக்குளம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பலி

    அண்டக்குளம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 2½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அண்டக்குளத்தை அடுத்த புதுக்குடியான்பட்டியை சேர்ந்தவர்கள் குமாரசாமி-சுசீலா தம்பதியின் மகள் குணவதி (2½ வயது). நேற்று முன்தினம் மாலை வீட்டின் பின்புறம் தண்ணீர் தொட்டிக்குள் அருகே குணவதி விளையாடி கொண்டிருந்தாள். இதையடுத்து அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தை எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்ததில் மூச்சுத்திணறி கிடந்தாள்.

    இதைப்பார்த்த அவரது பெற்றோர் குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக அண்டக்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினார். இதுகுறித்து அறிந்த உடையாளிப்பட்டி போலீசார் குழந்தையை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×