search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தக்காளி
    X
    தக்காளி

    அன்னவாசல் பகுதியில் தக்காளி விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை

    கடந்த சில நாட்களாக ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    அன்னவாசல்:

    சமையலுக்கு பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் தக்காளியும் ஒன்றாகும். கடந்த மாதம் கிலோ ரூ.10 முதல் ரூ.20 வரை தக்காளி விற்பனையானது. இந்த விலை கட்டுபடியாகாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    இந்தநிலையில், சாகுபடி பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையாலும், தக்காளி வரத்து குறைந்ததாலும் அதன்விலை கிடுகிடு வென உயர்ந்து தற்போது ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது‌. தக்காளியின் விலை திடீரென உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கவலையடைந்துள்ளனர்.

    விலை உயர்வு காரணமாக வழக்கமாக ஒரு கிலோ வாங்கும் இல்லத்தரசிகள் அரை கிலோவும், அரை கிலோ வாங்குபவர்கள் கால் கிலோவும் வாங்கியதை காண முடிந்தது. அதேவேளையில் இந்த விலை உயர்வு தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், கடந்த சில நாட்களாக ரூ.10 முதல் ரூ.20 வரை விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×