என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கானூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்12 Oct 2021 1:16 PM GMT (Updated: 12 Oct 2021 1:16 PM GMT)
கானூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கானூர் கிராமத்தை சேர்ந்தவர் அமலநாதன் (வயது 55) தொழிலாளி. இவர் அதே பகுதியில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை, அரசு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு ஏற்றி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியின் அடிப்பகுதியில் அமலநாதன் படுத்து தூங்கியதாக தெரிகிறது.
இதுபற்றி அறியாத டிரைவர் லாரியை இயக்கினார். இதில் லாரியின் அடியில் படுத்து தூங்கிய அமலநாதன், பின்பக்க சக்கரத்தில் சிக்கி, உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார், விரைந்து வந்து, பலியான அமலநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X