என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி - கொத்தனார் கைது
Byமாலை மலர்11 Oct 2021 1:13 PM GMT (Updated: 11 Oct 2021 1:13 PM GMT)
மயிலாடுதுறை அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கொத்தனாரை போலீசார் ‘போக்சோ’ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை அருகே உள்ள மாப்படுகை சிவசக்தி நகரை சேர்ந்த வீரமுத்து மகன் கார்த்திக் (வயது33). கொத்தனார். இவர் 12-ம் வகுப்பு படித்து வரும் 17 வயது சிறுமி ஒருவரிடம் பழகி வந்தார். சம்பவத்தன்று அந்த சிறுமி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணிக்கு வீட்டிற்குள் நுழைந்த கார்த்திக் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடிச்சென்றனர். அதற்குள் கார்த்திக் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X