என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காபியில் விஷம் கலந்து குடித்த தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை: போலீஸ் விசாரணை
Byமாலை மலர்9 Oct 2021 12:59 PM GMT (Updated: 9 Oct 2021 12:59 PM GMT)
கடலூர் முதுநகரில் காபியில் விஷம் கலந்து குடித்த தாய், மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் முதுநகர்:
கடலூர் முதுநகர் ஏணிக்காரன் தோட்டம் புதுசுனாமி நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி அம்மு(வயது 43). இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று அம்முவும், அவருடைய மகள் நரேஷனியும்(16) காபியில் விஷம் கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தாய், மகளை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தாய், மகள் இருவரும் எதற்காக காபியில் விஷம் கலந்து குடித்தனர் என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக கடலூர் முதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X