search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 103 பேர் பாதிப்பு

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது.
    வண்டலூர்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 619 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 962 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,482 ஆக உயர்ந்துள்ளது. 1,175 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 29 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 74 ஆயிரத்து 216 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 72 ஆயிரத்து 590 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,252 பேர் உயிரிழந்துள்ளனர். 374 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×