என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை-ரூ.3 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்9 Oct 2021 7:04 AM GMT (Updated: 9 Oct 2021 7:04 AM GMT)
திருவண்ணாமலையில் மின்வாரிய அலுவலர் வீட்டில் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தாமரை நகர் 21-வது தெருவில் வசிப்பவர் ராஜசேகரன் (வயது58). இவர் திருவண்ணாமலை மின்வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதை முன்னிட்டு அவர் குடும்பத்தினருடன் ஜவுளி எடுப்பதற்காக சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது தனதுவீட்டை பூட்டி விட்டு அருகில் வசிப்பவர்களிடம் சொல்லிவிட்டு சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.33 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ராஜசேகரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சென்னையில் உள்ள ராஜசேகரனிடம் இது பற்றி தகவல் தெரிவித்தனர். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு போய் விட்டதாக தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை தாமரை நகர் 21-வது தெருவில் வசிப்பவர் ராஜசேகரன் (வயது58). இவர் திருவண்ணாமலை மின்வாரியத்தில் செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதை முன்னிட்டு அவர் குடும்பத்தினருடன் ஜவுளி எடுப்பதற்காக சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் சென்றுள்ளார். அப்போது தனதுவீட்டை பூட்டி விட்டு அருகில் வசிப்பவர்களிடம் சொல்லிவிட்டு சென்றார்.
வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.33 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் ராஜசேகரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்து இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி உடனடியாக திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சென்னையில் உள்ள ராஜசேகரனிடம் இது பற்றி தகவல் தெரிவித்தனர். அப்போது அவர் தனது மகள் திருமணத்திற்கு வைத்திருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் திருட்டு போய் விட்டதாக தெரிவித்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் திருவண்ணாமலை மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X