என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சொத்து பிரச்சினையில் தகராறு: சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
கொள்ளிடம் அருகே சொத்து பிரச்சினையில் ஏற்பட்ட தகராறில் சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே சோதியகுடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவருக்கும், அவருடைய சகோதரர்கள் 3 பேருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இதுெதாடர்பாக சோதியகுடி கிராமத்தில் ஒரு இடத்தில் ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கோவிந்தராஜனின் மாமனார் அனுமந்தபுரத்தை சேர்ந்த சேகர் (வயது60), அவரது தம்பி பாண்டியன் (57) மற்றும் 18 வயது சிறுவர்கள் 2 பேர் உள்பட 15 பேர் ஒரு காரில் அங்கு வந்தனர். பின்னர் கோவிந்தராஜனுக்கு சொத்தில் அதிகம் பங்கு தரவேண்டும் என கூறி தகராறு செய்து, பேச்சுவார்த்தை நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி, சப்-இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாக்குதலில் ஈடுபட்ட சேகர், பாண்டியன் மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 4 பேரை கைது செய்து அவர்கள் வந்த காரையும் பறிமுதல் செய்தனர்.மேலும் சிலரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






