என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆலத்தூர் அருகே 2 வீடுகளில் 16 பவுன் நகை- ரூ.65 ஆயிரம் திருட்டு
Byமாலை மலர்8 Oct 2021 9:55 AM GMT (Updated: 8 Oct 2021 9:55 AM GMT)
ஆலத்தூர் அருகே 2 வீடுகளில் 16 பவுன் நகை மற்றும் ரூ.65 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கணபதியின் மகன் செந்தில்(வயது 25). இவரது வீட்டின் ஒரு பகுதியில் தாயுடன் வசித்து வருகிறார். மற்றொரு பகுதியில் பீரோ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த வீட்டின் பூட்டை கடப்பாரையால் உடைத்து, அங்கிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
இதேபோல் அதே ஊரின் கிழக்குத்தெருவில் வசித்து வருபவர் மணிவேல்(40). இவர் அப்பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று தங்கியிருந்தார். இந்நிலையில் அவரது வீட்டின் கதவை மர்மநபர்கள் உடைத்து பீரோவில் இருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிந்து இன்ஸ்பெக்டர் ஜெயராமனிடம் தீவிர விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். ஒரே நாள் இரவில் 2 வீடுகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X