search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து பலி
    X
    விபத்து பலி

    இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலி

    இலுப்பூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அன்னவாசல்:

    இலுப்பூர் அருகே வளதாடிப்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.இவரது மனைவி மாலதி (வயது 37). இவர்களது மகன் கேசவன் (17). தாய்-மகன் இருவரும் நேற்று வாளதாடிப்பட்டியில் இருந்து இலுப்பூரில் நடக்கும் வாரச்சந்தைக்கு பொருட்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை கேசவன் ஓட்டினார். பிலிப்பட்டி வடுவன்குளம் அருகே சென்ற போது மாடு ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது அப்போது மாடுமீது மோதாமல் இருக்க கேசவன் பிரேக் போட்டபோது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தலையில் படுகாயமடைந்த கேசவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மாலதி படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெக்ஸ்ஸ்டாலின் உள்ளிட்ட போலீசார் படுகாயம் அடைந்த மாலதியை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கேசவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×