என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகாசி அருகே கண்மாயில் மணல் அள்ளிய 3 பேர் கைது
Byமாலை மலர்7 Oct 2021 2:06 PM GMT (Updated: 7 Oct 2021 2:06 PM GMT)
சிவகாசி அருகே கண்மாயில் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி எம்.புதுப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ்குமார் மணல் கடத்தல் குறித்த தகவலின் பேரில் புதுக்கோட்டை கண்மாய் பகுதிக்கு சென்றார். அப்போது அங்கு மண் அள்ளும் எந்திரத்தின் உதவியுடன் சிலர் கண்மாயில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு இருந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த அழகாபுரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(வயது 32), கருப்பசாமி பாண்டியன்(23), மாணிக்கராஜா(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக மணல் அள்ள பயன்படுத்திய லாரியின் உரிமையாளர்கள் போத்திராஜா, அழகர்சாமி, லாரி டிரைவர் தங்கேஸ்வரன், கருப்பசாமி, ஆகியோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மணல் அள்ள பயன்படுத்திய மணல் அள்ளும் எந்திரம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X