என் மலர்
செய்திகள்

கைது
லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது
லாட்டரி சீட்டு விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
காவேரிப்பட்டணம் போலீசார் நகர பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ற சுபாஷ் சந்திர போஸ் தெரு எத்திராஜ் (வயது 63) என்பவரை கைது செய்தனர். அதே போல போச்சம்பள்ளி போலீசார் பஸ் நிலையம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற குமரவேல் (47) என்பவரை கைது செய்தனர். நாகரசம்பட்டி போலீசார் அகரம் கிராமத்தில் ரோந்து சென்றபோது லாட்டரி சீட்டுகள் விற்ற லோகநாதன் (65) என்பவரை கைது செய்தனர்.
Next Story






