search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவைப் பல்கலைக்கழகம்
    X
    புதுவைப் பல்கலைக்கழகம்

    புதுவை பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் 25-ந்தேதி முதல் தொடங்குகிறது

    அக்டோபர் 25-ந்தேதி முதல் புதுவை பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் புதுவை பல்கலைக்கழகத்தில் இன்னும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படவில்லை.

    இதுகுறித்து மாணவர் சங்கங்கள் வலியுறுத்தி வந்தநிலையில் நேரடி வகுப்புகளை தொடங்குவதற்கான அறிவிப்புகளை பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஆய்வு மாணவர்களில் அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களுக்கு வருகிற 25-ந்தேதி வகுப்புகள் தொடங்குகிறது. இறுதியாண்டு பட்டமேற்படிப்பு மாணவர்கள் 3-ம் ஆண்டு மாணவர்கள் (ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு) டிசம்பர் 6-ந்தேதியும், சமூக அறிவியல் பிரிவில் இறுதியாண்டு மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களுக்கு (ஒருங்கிணைந்த 5 ஆண்டு படிப்பு) ஜனவரி 17-ந்தேதியும் வகுப்புகள் தொடங்குகின்றன.

    இதர அனைத்து பட்டமேற்படிப்பு மாணவர்கள், ஆய்வு படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆகியோருக்கு நேரடி வகுப்பு தொடங்கும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

    இதற்கான அறிவிப்பை பல்கலைக்கழக பதிவாளர் அமரேஷ் சமந்த்ராயா வெளியிட்டுள்ளார்.
    Next Story
    ×