search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை
    X
    முற்றுகை

    திருப்பத்தூரில் குடிநீர்கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

    அப்பகுதி பெண்கள் உள்பட பலர் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் குடிநீர் குழாயை திறந்து விட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர் .

    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள காவிரி கூட்டுக்குடிநீர் ஏர் வாழ்வு தண்ணீரை அச்சு கட்டு பகுதியில்உள்ள பொதுமக்கள் குடிநீர் பயன்பாட்டிற்காக அந்த நீரை பிடித்து பயன் படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த குடிநீர் பைப் அடைக்கப்பட்டது இதனையடுத்து 2 நாட்களாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீருக்காக அலையும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் உள்பட பலர் திருப்பத்தூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு செயல் அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் குடிநீர் குழாயை திறந்து விட வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்தனர் .

    அதன் பின்னர் பொது மக்கள் மற்றும் தமுமுக நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசனை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர்.அதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.இதனால் பேரூராட்சி அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×