என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட பா.ம.க. முடிவு
Byமாலை மலர்29 Sep 2021 8:34 AM GMT (Updated: 29 Sep 2021 8:34 AM GMT)
புதுவை உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வும் இடம்பெற்றிருந்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது. புதுவையில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது.
இதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. இடம்பெற்றது. பா.ம.க. இடம்பெறவில்லை.
இந்த நிலையில் புதுவை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பா.ம.க. ஆலோசனை கூட்டம் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் பா.ம.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுவையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறது. புதுவையில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கூட்டணி தலைவரான ரங்கசாமி, பா.ம.க.வை அழைக்கவில்லை.
இதன் காரணம் தெரியவில்லை. புதுவை உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளிடம் இருந்து முறையான அழைப்பு வரவில்லை.
இச்சூழலில் கூட்டணிக்கு காத்திருக்காமல் பா.ம.க. தேர்தல் பணிகளை தொடங்குகிறது. அனைத்து இடங்களிலும் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் செயல்பாடுகள் குறித்து உயர்மட்டக்குழுவில் எடுத்த முடிவுகள் கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் புதுவை உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
புதுவை சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க.வும் இடம்பெற்றிருந்தது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து பா.ம.க. விலகியது. புதுவையில் சமீபத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்தது.
இதில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க., அ.தி.மு.க. இடம்பெற்றது. பா.ம.க. இடம்பெறவில்லை.
இந்த நிலையில் புதுவை உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பா.ம.க. ஆலோசனை கூட்டம் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில் நடந்தது. இதில் பா.ம.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு பின் தன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுவையில் பா.ம.க. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் தொடர்கிறது. புதுவையில் இப்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் கூட்டணி தலைவரான ரங்கசாமி, பா.ம.க.வை அழைக்கவில்லை.
இதன் காரணம் தெரியவில்லை. புதுவை உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிடும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம். கூட்டணி கட்சிகளிடம் இருந்து முறையான அழைப்பு வரவில்லை.
இச்சூழலில் கூட்டணிக்கு காத்திருக்காமல் பா.ம.க. தேர்தல் பணிகளை தொடங்குகிறது. அனைத்து இடங்களிலும் போட்டியிட விருப்ப மனு பெறப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் செயல்பாடுகள் குறித்து உயர்மட்டக்குழுவில் எடுத்த முடிவுகள் கட்சி தலைமைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதனால் புதுவை உள்ளாட்சி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X